மலையாள சினிமாவின் முதல் ரூ.200 கோடி க்ளப்: ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ வரலாற்றுச் சாதனை

மலையாள சினிமாவின் முதல் ரூ.200 கோடி க்ளப்: ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ வரலாற்றுச் சாதனை
Updated on
1 min read

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரூ.50 கோடியை வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 12 நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்தது.

26 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மலையாளத்தில் ரூ.200 கோடியை வசூலித்த முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. அதேபோல தமிழகத்தில் ரூ.50 கோடியை வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

இரண்டாவது இடத்தில் ‘2018’ (ரூ.175 கோடி) திரைப்படம் உள்ளது. ரூ.135 கோடியுடன் மோகன்லாலின் ‘புலிமுருகன்’, மற்றும் ரூ.125 கோடியுடன் ‘லூசிஃபர்’ படங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in