“18 வருடங்களுக்குப் பிறகு இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி” - சிரஞ்சீவி படத்தில் நடிகை த்ரிஷா

“18 வருடங்களுக்குப் பிறகு இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி” - சிரஞ்சீவி படத்தில் நடிகை த்ரிஷா
Updated on
1 min read

ஹைதராபாத்: சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளார். “18 வருடங்களுக்குப் பிறகு நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குநர் மல்லிதி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம் ‘விஸ்வம்பரா’ (Vishwambhara). யுவி கிரியேஷன் ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். கடந்த ஜனவரி மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ‘பொன்னியின் செல்வன்’, ‘லியோ’ படங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துவந்தார். அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது.

இந்நிலையில் தற்போது சிரஞ்சீவியின் 156-வது படமான ‘விஸ்வம்பரா’ படத்தில் த்ரிஷா இணைந்துள்ளதாக நடிகர் சிரஞ்சீவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷா கலந்துகொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள த்ரிஷா, “18 வருடங்களுக்குப் பிறகு உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். நன்றி” என தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘ஸ்டாலின்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in