மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

பிரிட்னி ஸ்பியர்ஸ்

பிரிட்னி ஸ்பியர்ஸ்

Updated on
1 min read

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி ஸ்பியர்ஸ் தாமாக முன்வந்து மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வெஞ்சுரா கவுண்டியில் அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக மார்ச் 4 -ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மறுநாள் அதிகாலையில் விடுவிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் இறுதி செய்யப்படாத நிலையில் மே 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரிட்னியின் மேலாளர் கேட் ஹட்சன் வெளியிட்ட அறிக்கையில், “இது துரதிர்ஷ்டவசமான மற்றும் மன்னிக்க முடியாத சம்பவம். பிரிட்னி, சட்டத்துக்கு முழுமையாகக் கட்டுப்படுவார். அவரது வாழ்க்கையில் நீண்டகாலமாகத் தேவைப்படும் ஒரு மாற்றத்துக்கு இதுவே தொடக்கமாக அமையும் என்று நம்புகிறோம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மதுபோதையால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தாமாக முன்வந்து ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்ந்துள்ளார். அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக, அவர் குணமடைவதற்காக இம்முடிவை எடுத்துள்ளார்.

<div class="paragraphs"><p>பிரிட்னி ஸ்பியர்ஸ்</p></div>
திருமணத்துக்குப் பிறகு படப்பிடிப்பில் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in