“வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம்!” - சாரா அர்ஜுன் நெகிழ்ச்சி

“வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம்!” - சாரா அர்ஜுன் நெகிழ்ச்சி

Published on

‘தெய்​வத்​திரு​மகள்​’,‘சைவம்’ படங்​களில் குழந்தை நட்​சத்​திர​மாக நடித்த சாரா அர்​ஜுன், மணிரத்​னத்​தின் ‘பொன்​னி​யின் செல்​வன்’ படத்​தில் இளவயது ஐஸ்​வர்யா ராயாக நடித்​துப் புகழ்​பெற்​றார்.

இவர் ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யாகி சூப்​பர் ஹிட்​டாக ஓடிக் கொண்​டிருக்​கும் ‘துரந்​தர்’ படத்​தில் கதா​நாயகி​யாக நடித்​துள்​ளார். ஆதித்யா தார் இயக்​கி​யுள்ள இப்​படம், கதா​நாயகி​யாக சாரா அர்​ஜுனுக்கு முதல் படம். மூன்​றரை மணி நேரம் ஓடும் ‘துரந்​தர்​’படத்​தில் மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்​துள்​ளனர். இது​வரை ரு.1,200 கோடிக்கு மேல் வசூலித்து ஓடிக் கொண்​டிருக்​கிறது.

இந்​நிலை​யில் இப்​படத்​தின் வெற்​றிக்​காக சாரா அர்​ஜுன் பார்​வை​யாளர்​களுக்கு நன்றி தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “நீண்ட நேரம் சொல்​லும் கதைகளைப் பார்க்​கும் பொறுமை, பார்​வை​யாளர்​களுக்கு இல்லை என்று கூறப்​படு​வது தவறு என்​பதை இப்​படம் நிரூபித்​துள்​ளது. ‘துரந்​தர்’ வெற்றி முற்​றி​லும் பார்​வை​யாளர்​களால்​தான்.

அதற்​காக நன்​றி. நாயகி​யாக என்வாழ்க்​கையை இப்​போது​தான் தொடங்​கு​கிறேன். இவ்​வளவு விரை​வில் ஊக்​கம் பெறு​வது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம். இது என்னை பலப்படுத்துகிறது. இப்படத்தில் நானும் ஓர் அங்கமாக இருந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம்!” - சாரா அர்ஜுன் நெகிழ்ச்சி
'ஜனநாயகன்' ஹைப் எதிரொலி: ஓடிடியில் ட்ரெண்ட் ஆகும் 'பகவந்த் கேசரி'

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in