

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்த திரைப்படமான, ‘துரந்தர்’ ரூ.1300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனைப் படைத்தது. ஆதித்யா தார் இயக்கிய இந்த ஸ்பை த்ரில்லர் படம், 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் முதலிடத்தில் உள்ளது.
இப்படத்தின் அடுத்த பாகம் ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’ என்று தலைப்பில் கடந்த 19-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியானது. முதல் பாகம் வெற்றிபெற்றதால், 2-ம் பாகத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
திரை பிரபலங்களும் இப்படத்தைப் பாராட்டி கருத்து தெரிவித்திருப்பதால் ஏராளமானோர் இதைப் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் இப்படம் முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்தது. வெளியான 3 நாட்களில் மட்டும் உலக அளவில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அதிக வசூலை அள்ளும் என்கிறார்கள்.