

இந்தியாவில் நவீன ஓவிய முன்னோடியாகக் கருதப்படுபவர் அம்ரிதா ஷெர்-கில். ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் பிறந்த இவரது தந்தை, உம்ராவ் சிங் ஷெர்-கில் சீக்கியர். தாய் ஹங்கேரியை சேர்ந்தவர்.
ஆரம்பத்தில் மேற்கத்திய பாணியில் ஓவியங்களை வரைந்து வந்த அம்ரிதா ஷெர்-கில், 1934-ல் இந்தியா திரும்பிய பிறகு இந்தியக் கலைகளின் மீது, குறிப்பாக அஜந்தா மற்றும் முகலாயக் கலைகளால் ஈர்க்கப்பட்டார். அம்ரிதாவின் ஓவியங்கள் பெரும்பாலும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும், கிராமப் புற இந்தியப் பெண்களின் மனநிலையையும் படம்பிடித்துக் காட்டின.
இவர் 1941-ம் ஆண்டு தனது 28-வது வயதில் கராச்சியில் காலமானார். இவருடைய வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. இதை ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய மீரா நாயர் இயக்குகிறார். இதில் அம்ரிதா ஷெர்-கில்-லாக அஞ்சலி சிவராமன் நடிக்கிறார். இவர் தமிழில் ‘பேட் கேர்ள்’ படத்தில் நடித்தவர்.
நெட் பிளிக்ஸில் வெளியான ‘கிளாஸ்’ என்ற தொடரிலும் நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்டோரை ஆடிஷன் செய்ததில் அம்ரிதாவின் தோற்றம் அஞ்சலிக்கு பொருந்தியதால் அவரை தேர்வு செய்துள்ளனர். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, ஜெய்தீப், ஜிம் சரப் உள்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஹங்கேரி, பிரான்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருக்கிறது.