ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கு பிப்.13-ல் விசாரணை

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கு பிப்.13-ல் விசாரணை
Updated on
1 min read

புதுடெல்லி: பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் 'வீர ராஜா வீரா’ பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயஸ் வாசி ஃபுதீன் தாகர் தொடர்ந்த பதிப்புரிமை வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது. இவ்வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மானை கடந்த செப்டம்பரில் விடுவித்தது.

இதை எதிர்த்து பாடகர் தாகர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (பிப்.13) தள்ளி வைத்தது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கு பிப்.13-ல் விசாரணை
7 மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in