

பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர். ‘ஆஷிகி 2’, ‘ஏக்தா வில்லன்’, ‘பாஹி’, ‘ஸ்திரீ 2’, பிரபாஸ் ஹீரோவாக நடித்த ‘சாஹோ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இப்போது ‘ஈதா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது, பிரபல மராத்தி நடனக் கலைஞரும் பாடகியுமான விதாபாய் பாவ் மங் நாராயண்காங்கர் என்பவர் வாழ்க்கை கதையைக் கொண்ட படம். லக்ஷமண் உடேகர் இயக்கும் இப்படத்துக்காக, லாவணி பாடல் காட்சியைப் படமாக்கி வந்தனர்.
அப்போது வேகமான நடன அசைவுகளில் ஷ்ரத்தா கபூர் ஆடிக்கொண்டிருந்தார். கால் விரலை ஊன்றி ஆட வேண்டிய காட்சி என்பதால் ரிஸ்க் எடுத்து ஆடியபோது, எதிர்பாராதவிதமாக அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இச்சம்பவத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.