

நடிகை சாய் பல்லவி
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணக் கதை திரைப்படமாகி இருக்கிறது. இதில் இந்தி நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். ராவணனாக யாஷ் நடித்துள்ளார். அனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே என பலர் நடித்துள்ளனர்.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தீபாவளிக்கு வெளியாகிறது. 2-வது பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் சர்வதேச பிரீமியர் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் துபாயில் நடைபெற இருந்தது.
மேற்காசியாவில் நிலவிய போர் பதற்றம் காரணமாக, அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அங்கு நிலைமை சீரடைந்துள்ளதால், துபாயில் பிரம்மாண்ட பிரீமியர் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகத் துபாயில் உள்ள பல்வேறு அரங்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.