“சீதையாக நடிக்க தினமும் தியானம் செய்தேன்” - ‘ராமாயணம்’ பட விழாவில் சாய் பல்லவி நெகிழ்ச்சி

“சீதையாக நடிக்க தினமும் தியானம் செய்தேன்” - ‘ராமாயணம்’ பட விழாவில் சாய் பல்லவி நெகிழ்ச்சி
Updated on
1 min read

பிரபல இயக்​குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை ‘ரா​மாயணா’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்​கி​யுள்​ளார். இதில் ரன்​பீர் கபூர் ராம​னாக​வும் சாய் பல்​லவி சீதை​யாக​வும் ராவணனாக யாஷும் அனு​ம​னாக சன்னி தியோலும் நடித்துள்ளனர்.

இந்​தப் படம் 2 பாக​மாக உரு​வாகி உள்ளது. ஹாலிவுட்​டில் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்​றும் அனிமேஷன் நிறு​வனத்தை நடத்தி வரும் நமித் மல்​ஹோத்​ரா, தனது பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்​பில் இதை தயாரிக்​கிறார். நடிகர் யாஷின் மான்​ஸ்​டர் மைண்ட் கிரியேஷன்​ஸும் இணைந்து தயாரிக்​கிறது.

இதன்முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்​கும் 2-வது பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்​கும் வெளி​யாக இருக்​கிறது. இப்​படத்​தின் டிரெய்​லர் ஜூலை 24-ல் வெளி​யாக இருக்​கிறது. அதற்கு முன் இப்​படத்​தின் அதி​காரப்​பூர்வ டிரெய்​லர், முதல் முறை​யாக டெல்லியில் நடந்த விழாவில் பிரத்​யேக​மாகத் திரை​யிடப்​பட்​டது.

அப்போது தயாரிப்​பாளர் நமித் மல்​ஹோத்ரா கூறும்​போது, “எங்களது நிறு​வனம் விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரி​வில் 8 ஆஸ்​கர் விருதுகளை வென்று சாதனை படைத்​துள்​ளது. இந்​தி​யா​வில் உள்ள நம்​முடைய கலைஞர்​கள், நம்​முடைய திறமை, ஆர்​வம் ஆகியவை உலகிலேயே சிறந்​தவை என்​ப​தால் தான் இது சாத்தியமானது. ஆனால் அதற்​கான அங்​கீ​காரம் நமக்கு கிடைக்கவில்லை.

இந்​தி​யா​வும், இந்​தி​யா​வின் திரைப்​படத் துறை​யும் ஹாலிவுட்​டில் இருந்து தூரத்​தில் இருக்​கிறது. எனவே, நம்​மிடம் இருக்​கும், நமக்குச் சொந்​த​மான, நாம் பெரு​மைப்​படக்​கூடிய ஒரு கதையை ஏன் உலகுக்​குச்சொல்​லக் கூடாது என்று நினைத்​தேன். அதற்கு ராமாயணத்​தை தவிர வேறு எந்த கதை​யும் நினை​வுக்கு வரவில்லை.

ராமாயணம் உலகின் மிகச்​சிறந்த கதைகளில் ஒன்​று. அதன் பெருமை, அது சொல்​லும் வாழ்க்கை நெறி​முறை​களில் உள்​ளது. ஏற்​கெனவே அது உலக மக்​களிடம் புகழ்​பெற்ற காவி​யம். ராமாயணத்​தின் பிரம்​மாண்​ட​மான காட்​சிகளை மட்​டுமல்​லாமல், அதன் உணர்​வு​கள், மனி​தாபி​மானம் மற்​றும் காலத்​தால் அழி​யாத ஆன்மா ஆகிய​வற்​றை​யும் இந்​தத் திரைப்​படம் மூலம் பார்வையாளர்​கள் உணர்​வார்​கள் என்று நம்​புகிறேன்” என்றார்.

சாய் பல்​லவி கூறும்​போது, “சீதை​யின் கதா​பாத்​திரத்தை நான் தேர்ந்தெடுக்​க​வில்​லை. அந்​தக் கதா ​பாத்​திரத்​தில் நடிக்​கும் பாக்கி​யம் எனக்​குக் கிடைத்துள்ளது. சீதையாக நடிக்க தின​மும் தியானம் செய்​தேன். சில நேரங்​களில், சீதையை நினைத்​து, ‘நீங்கள் என்​னுள் இருந்து நடி​யுங்​கள்; இந்​தப் படத்​துக்​குத் தேவையானது எதுவோ அது என்​னுள் இருந்து வெளிப்​படட்​டும்’ என்று பிரார்த்​தனை செய்​தேன்” என்​றார். நடிகர்​கள் ரன்​பீர் கபூர், யாஷ், ஷோப​னா, விவேக் ஓபராய், ரகுல் ப்ரீத் சிங் உள்பட பலர் கலந்துகொண்​டனர்​.

“சீதையாக நடிக்க தினமும் தியானம் செய்தேன்” - ‘ராமாயணம்’ பட விழாவில் சாய் பல்லவி நெகிழ்ச்சி
மம்தா, உத்தவ் கட்சிகளின் பிளவால் புதுமுகம் பெறும் நாடாளுமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in