“என்னை மிகவும் ஸ்பெஷலாக உணர வைத்தற்கு நன்றி” - ஷாருக்கான் நெகிழ்ச்சி

“என்னை மிகவும் ஸ்பெஷலாக உணர வைத்தற்கு நன்றி” - ஷாருக்கான் நெகிழ்ச்சி
Updated on
1 min read

தனது பிறந்தநாளையொட்டி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், 'என்னை மிகவும் ஸ்பெலஷலாக உணர வைத்ததற்கு நன்றி' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

'பாலிவுட் பாட்ஷா' என புனைப்பெயர் கொண்டு அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் 1992-ம் ஆண்டு வெளியான 'தீவானா' படத்தின் மூலம் திரையுலகத்திற்குள் அடியெடுத்து வைத்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட்டில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'ஜீரோ' படத்திற்கு பிறகு அவர் சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தாலும் நாயகனாக முழு நீள திரைப்படத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடிக்கவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். ரசிகர்களுக்கு திரைவிருந்து அளிக்கும் வகையில் 2023-ம் ஆண்டு, அதாவது அடுத்த ஆண்டு அவரது நடிப்பில் 4 படங்கள் வெளிவர உள்ளன.

இந்நிலையில், இன்று நடிகர் ஷாருக்கான் தனது 57-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளையொட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ள 'பதான்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரது வீட்டின் முன்பு நள்ளிரவு முதல் ரசிகர்கள் கூட்டம் கூடத்தொடங்கியது. அவரும் ரசிகர்களை சந்தித்தார்.

இதையடுத்து தற்போது நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பிறந்தநாளை ஸ்பெஷலாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ''கடலின் முன்பு வாழ்வது மிகவும் அற்புதமானது. என்னுடைய பிறந்த நாளில் அன்பு எனும் கடல் என்னை சுற்றி பரவிக் கிடக்கிறது. என்னை ஸ்பெஷலாக உணர வைத்ததற்கு நன்றி'' என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in