இர்ஃபான் கான் மறைவுச் செய்தியைக் கேள்விப்பட்டு மனமுடைந்து போனேன்: தனுஷ்

இர்ஃபான் கான் மறைவுச் செய்தியைக் கேள்விப்பட்டு மனமுடைந்து போனேன்: தனுஷ்
Updated on
1 min read

இர்ஃபான் கான் மறைவுச் செய்தியைக் கேள்விப்பட்டு மனமுடைந்து போனேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான். அதற்குப் பிறகும் மீண்டும் சில படங்களில் நடித்தார். இதனிடையே நேற்று (ஏப்ரல் 28) அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

இதனிடையே, இன்று (ஏப்ரல் 29) காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இர்ஃபான் கான் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது இர்ஃபான் கான் மறைவு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

"செய்தியைக் கேள்விப்பட்டு மனமுடைந்து போனேன். எவ்வளவு அற்புதமான திறமையுள்ள மனிதரை நாம் இழந்துவிட்டோம். என்றும் அவர் எனக்குச் சொன்ன கனிவான வார்த்தைகளை நினைவில் வைத்திருப்பேன். ஒரு சிறந்த இடம் உள்ளது. அங்கு அவர் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவரது குடும்பத்துக்கும், நெருக்கமானவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்".

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in