என் வெற்றிகளுக்கு நீதான் காரணம்- புகழ்ந்த ரன்வீர்; கண்ணீர்விட்ட தீபிகா

என் வெற்றிகளுக்கு நீதான் காரணம்- புகழ்ந்த ரன்வீர்; கண்ணீர்விட்ட தீபிகா
Updated on
1 min read

மும்பையில் ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள்  சார்பாக 'பத்மாவத்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்குக்கு வழங்கப்பட்டது. விழாவுக்கு ரன்வீரும் தீபிகா படுகோனும் வந்திருந்தனர். அப்போது பேசிய ரன்வீர், ''என்னுடைய ராணி 'பத்மாவத்' படத்தில் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் என் ராணியை அடைந்துவிட்டேன். உன்னை நேசிக்கிறேன் தீபிகா.

இந்த ஆறு வருடத்தில் நான் எதையாவது சாதித்திருந்தால் அதற்கு நீதான் காரணம். என்னைச் செதுக்கியது நீதான். எனக்கு நீ அளித்த எல்லாவற்றுக்கும் நன்றி. ஐ லவ் யூ தீபிகா'' என்றார்.

இதைக் கேட்ட தீபிகா கண் கலங்கினார். கண்ணீர்த் துளிகள் உருண்டு கன்னத்தில் விழுந்தன. எனினும் கண்களில் நிறைந்த நீருடன் சமாளித்துக் கொண்டு சிரித்தார் தீபிகா. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனும் நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். எனினும் இதை வெளியே சொல்லாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தங்கள் காதலை உறுதி செய்தனர். இவர்களின் திருமணம் இத்தாலியில் பிரபல கோமோ ஏரியில் உள்ள மாளிகையில் நவம்பர் 14-ம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in