இந்தியில் அறிமுகமாகும் ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!

இந்தியில் அறிமுகமாகும் ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!
Updated on
1 min read

‘அமரன்’ படத்தின் வரவேற்பால் இந்தியிலும் படமொன்றை இயக்கவுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை கமல்ஹாசன், மகேந்திரன் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரித்தது.

’அமரன்’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனுஷ் படத்தை முடித்துவிட்டு இந்திப் படமொன்றை இயக்கவுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

முன்னணி இந்தி தயாரிப்பாளரான பூஷண் குமாருக்கு ‘அமரன்’ படம் மிகவும் பிடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இயக்குநரை தொடர்புக் கொண்டு பேசி, தனது நிறுவனத்துக்கு படமொன்றை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். என்ன கதை, யார் நாயகன் என்பது எதுவுமே இன்னும் முடிவாகவில்லை.

‘பார்டர் 2’, ‘ஸ்பிரிட்’, ‘அனிமல் பார்க்’, ‘ரைடு 2’, ‘பூத்நாத் 3’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறார் பூஷண் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in