இந்தி வாய்ப்பு கிடைத்தது எப்படி? - டாப்ஸி விளக்கம்

இந்தி வாய்ப்பு கிடைத்தது எப்படி? - டாப்ஸி விளக்கம்
Updated on
1 min read

தமிழ், தெலுங்கில் நடித்து வந்த டாப்ஸி, இப்போது இந்தியில் கவனம் செலுத்திவருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்துவந்த அவர், இப்போது அங்கு கமர்சியல் படங்களிலும் நடித்து வருகிறார். ஷாருக்கானுடன் ‘டங்கி’ படத்தில் நடித்திருந்த அவர், அக்‌ஷய்குமாருடன் நடித்துள்ள ‘கெல் கெல் மேய்ன்’ ஆக.15-ல் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் இந்திப் படங்களில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி தெரிவித்துள்ளார். அதில், “நடிகை பிரீத்தி ஜிந்தாவின் சாயல் இருந்ததால் என்னை இந்திக்கு அழைத்தார்கள். அவரின் புதிய பதிப்பாக என்னை நினைத்தார்கள். அதனால்தான் இந்தி வாய்ப்புகள் கிடைத்தன. பிரீத்தி ஜிந்தாவை விவேகமான மற்றும் புத்திசாலித்தனமான நடிகையாக பார்க்கிறேன். அவர் சாயலால் இந்தி சினிமாவுக்கு வந்ததால் அவர் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்றுநினைத்தேன். அதனால் அவரைபோலவே இருக்க கடினமாக முயற்சித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in