‘தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்’ - பவதாரிணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி

‘தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்’ - பவதாரிணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி

Published on

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

“இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்.

அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல். பவதாரணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார், நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in