Published : 12 Nov 2022 06:30 AM
Last Updated : 12 Nov 2022 06:30 AM

சுந்தரனார் பல்கலை. சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம் சார்பில் டாட்டா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங் களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பல்கலைக்கழக சுந்தரனார் அரங்கில் வரும் 15-ம் தேதி காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வசிக்கும் 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். கலை, அறிவியல் மற்றும் வணிகம் சார்ந்த இளங்கலை பட்டம் பெற்ற மாணவ, மாணவியர் அனைவரும் டாட்டா நிறுவனத்தில் கணினி சேவைகள், வணிகத் தீர்வுகள் மற்றும் ஆலோசனை சார்ந்த பரிவுகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புவோர் பல்கலைக்கழக இணையதளத்தில் https://www.msuniv.ac.in/ தங்கள் சுயவிவர குறிப்பு தகவலை பதிவு செய்ய வேண்டும். நேர்காணலுக்கு வரும்போது சுயபதிவேடு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அல்லது ஏதாவது ஓர் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0462 2563213,2563437 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x