Published : 12 Oct 2022 07:05 AM
Last Updated : 12 Oct 2022 07:05 AM

சென்னை புது கல்லூரியில் அக்டோபர் 15-ம் தேதி அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், சென்னை புது கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்வரும் அக்.15-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கோ.வீரராகவராவ் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம், அக்.15-ம்தேதி ராயப்பேட்டை புது கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்களால் 40,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

இம்முகாமில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, நர்ஸிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம். மேலும், இம்முகாமில் சிறப்பு நேர்வாக பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் பல தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இம்முகாமில் கலந்துகொள்ள வரும் தகுதி படைத்த அனைவரும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டைஆகியவற்றின் நகல்கள் மற்றும்சுயவிவரக் குறிப்புடன் (Bio-Data)நேரில் வருகைப்புரிந்து தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பை பெற்று பயனடைலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x