Published : 12 Aug 2022 06:28 AM
Last Updated : 12 Aug 2022 06:28 AM

காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (12-ம் தேதி) நடைபெற உள்ளது.

இதில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

இதில், இளநிலை பொறியியல் பட்டம் படித்தவர், டிப்ளமோ, ஐடிஐ, பிளஸ் 2 மற்றும் 10-ம்வகுப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம்.

காலை 10 மணிக்கு தொடங்கும் முகாமில் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் முகாமில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது என இரு மாவட்ட நிர்வாகங்களும் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x