Published : 23 Mar 2022 06:14 AM
Last Updated : 23 Mar 2022 06:14 AM

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி: தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நாளை (24-ம் தேதி) தனியார் துறை வேலை வாய்ப்புமுகாம் நடக்க உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நாளை (24-ம் தேதி) இந்த முகாம் நடக்க உள்ளது.

பள்ளிக் கல்வி முடித்தோர், பட்டம் பெற்றவர்கள், பல்வேறு திறன் பயிற்சி பெற்றவர்கள் இம்முகாமில் பங்கேற்று பணி வாய்ப்பு பெறலாம்.

தருமபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஓசூர், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று தங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநர்களும் http://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்து கொள்ளவும். இணைய வழியில் பதிவு செய்யவும், முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறியவும் 04342-296188 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தருமபுரி மாவட்ட இளையோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்புகளைப் பெற்று பயனடையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x