Published : 04 Nov 2019 05:25 PM
Last Updated : 04 Nov 2019 05:25 PM

வேலை வேண்டுமா?- மத்திய அரசுப் பணி; 540 காலியிடங்கள்

மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான எல்லையோர சாலைகள் அமைப்பில் (BRO) உதவியாளர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியான ஆண்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

1. வேலையின் பெயர்: பல்திறன் ஊழியர் (Multi Skilled Worker)
2. காலியிடங்கள்: 540
3. ஊதியம்: ரூ.18,000 முதல்
4. கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும், கூடுதல் தகுதியாக ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

5. வயது வரம்பு: 18 முதல் 25 வயதுக்குள் இருக்கவேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் விதிவிலக்கு உண்டு. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையும் ஜம்மு காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

6.தேர்வு முறை:
தேர்வில் Physical Test, Practical Test, Written Test மற்றும் Medical Test ஆகியவை நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவர்கள் பணிக்கு அழைக்கப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?
அஞ்சல் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm?corpID=1232156 என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அதில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அந்தப் படிவத்தையும் விண்ணப்பப் படிவத்தையும் Commandant, GREF CENTRE, Dighi Camp, Pune - 411 015 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ.50.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: http://www.bro.gov.in/WriteReadData/linkimages/1406325940-12.pdf?_ga=2.66657070.1473096438.1572865186-598418090.1561965683 என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x