Published : 11 Jun 2024 06:00 PM
Last Updated : 11 Jun 2024 06:00 PM

இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21-க்கு தள்ளிவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

கோப்புப் படம்

சென்னை: இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் - செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஜூன் 23-ம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி நடைபெறுவதாக இருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு, நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுகிறது.

இத்தேர்வு ஜூலை 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,768 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட உள்ள இத்தேர்வுக்கு 26,510 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x