Published : 28 Sep 2023 04:07 AM
Last Updated : 28 Sep 2023 04:07 AM

விஐடி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’: அரசு வேலைவாய்ப்பு, உயர்கல்வி குறித்த வெப்பினார் தொடர்

வி.டில்லிபாபு

சென்னை: நாட்டுக்கு சேவை புரியும் வகையில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து 10, 11,12-ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி இளங்கலை, முதுகலை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டிடக்கலை ஆகிய உயர்கல்வி தொடர்பான மாணவர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணையவழி வெப்பினார் நிகழ்ச்சி வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் மாலை 4 மணிக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில்கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்துள்ளது.

அந்த வகையில், வரும் செப்.30-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள வெப்பினாரில், ‘இந்திய ஆட்சிப் பணியில் (IAS) வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் ஆர்.ஆனந்தகுமார், ஐஏஎஸ் உரையாற்ற உள்ளார்.

அக்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள வெப்பினாரில் ‘இந்திய வெளியுறவுப் பணியில் (IFS) வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் மத்திய அரசு இயக்குநர் மற்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.கோவேந்தன், ஐஎஃப்எஸ் உரையாற்ற உள்ளார்.

ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு இந்த 2 வெப்பினார் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து கலந்துரையாட உள்ளார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் https://www.htamil.org/DKNP002 என்ற லிங்க் மூலமாகவோ, அருகே உள்ள கியூஆர்கோடு மூலமாகவோ பதிவுசெய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களை பெற 9500165460 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x