ரூ.505 கோடி மதிப்பிலான பத்திரங்கள் முடக்கம்: பணமோசடி வழக்கில் வின்சோ நிறுவனர்கள் கைது

ரூ.505 கோடி மதிப்பிலான பத்திரங்கள் முடக்கம்: பணமோசடி வழக்கில் வின்சோ நிறுவனர்கள் கைது
Updated on
1 min read

பெங்களூரு: ஆன்​லைன் கேமிங் தளமான வின்சோ (WinZO) தடை செய்​யப்​பட்ட ஆன்​லைன் சூதாட்ட விளை​யாட்​டு​களை நடத்தவதாக புகார் எழுந்​தது.

மேலும், பெரும்பான்​மை​யான நேரங்​களில் வாடிக்​கை​யாளர்​கள் மனிதர்​களுடன் விளை​யா​டா​மல் மென்​பொருளு​டன் விளையாடும் வகையில் ஆட்​டத்தை வடிவ​மைத்​தது தெரியவந்தது. இதைக் கண்​டறிந்த சில வாடிக்​கை​யாளர்​கள் தங்களின் பணத்தை கோரினர்.

ஆ​னால்​, வின்​சோ நிறு​வனம்​ வாடிக்​கை​யாளர்​களின்​ ரூ.43 கோடியை முடக்​கி வைத்​திருந்​தது. மேலும்​ அந்​நிறு​வனம்​ அமெரிக்​க வங்​கிக்​ கணக்​கில்​ ரூ.489 கோடியை மறைத்​து வைத்திருந்​தது. அமலாக்​கத்​துறை நடத்​தி​ய சோதனை​யில்​ ரூ.505 கோடி மதிப்​பிலான பத்​திரங்​கள்​ முடக்​கப்​பட்​டுள்​ளன.

இதையடுத்து வின்சோ நிறு​வனர்​கள் சவுமியா சிங் ரத்​தோர், பவன் நந்தா ஆகியோர் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டு, நேற்று நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, இரு​வரை​யும் 7 நாள் காவலில் எடுத்து விசா​ரித்து வரு​கின்​றனர்​.

ரூ.505 கோடி மதிப்பிலான பத்திரங்கள் முடக்கம்: பணமோசடி வழக்கில் வின்சோ நிறுவனர்கள் கைது
பங்குச் சந்தை வர்த்தக மோசடியில் ரூ.35 கோடியை இழந்த மும்பை முதியவர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in