

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் வி.டி. சதீசன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தில் வரும் 18-ம் தேதி முதல் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் தொடங்கும். துறைமுகத்தின் செயல்பாடுகள் மூலம் மாநிலம் நேரடியாகப் பயனடைவதற்கான முதல் நடவடிக்கையாக ஏற்றுமதி-இறக்குமதி சேவைகள் தொடங்கப்படுகின்றன.
இதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அறிவிப்புகளை சுங்கத் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் சதீசன் கூறினார். இந்த துறைமுகத்தை அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன் நிறுவனம் நிர்வகிக்கும்.