

சென்னை வேதாந்தா நிறுவனம், 31 டிசம்பர் 2025 அன்று முடிவடைந்த 2025–26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கு உரிய, தணிக்கை செய்யப்படாத ஒருங்கிணைந்த நிதி முடிவுகளை நேற்று வெளியிட்டது.
இதன்படி, இந்நிறுவனத்தின் 3-ம் காலாண்டு வருவாய் ரூ.45,899 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் 3-ம் காலாண்டை விட 19% அதிகம். இதுபோல வரிக்கு பிந்தைய லாபம் 60% உயர்ந்து ₹7,807 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் நிதிநிலை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. மொத்த கடனில் இருந்து EBITDA விகிதம் 1.40 மடங்கிலிருந்து 1.23 மடங்காக குறைந்துள்ளது. மூலதன முதலீட்டின் மீதான வருமான விகிதம் 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2025–26 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில், வேதாந்தா நிறுவனம் வளர்ச்சி திட்டங்களுக்காக சுமார் ரூ.11,953 கோடியை முதலீடு செய்துள்ளது.