தேசிய நெடுஞ்சாலைகளில் செல்போன் நெட்வொர்க்கை மேம்படுத்த என்எச்ஏஐ கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்போன் நெட்வொர்க்கை மேம்படுத்த என்எச்ஏஐ கோரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் (என்​எச்​ஏஐ) வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: "நாடு முழு​வதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் என்​எச்ஏஐ ஒருவிரி​வான ஆய்வை மேற்​கொண்​டது. இதன்​படி, 1,750 கி.மீ. தூரத்தை உள்ளடக்​கிய 424 பகு​தி​களில் செல்​போன் நெட்​வொர்க் வசதி இல்லை என தெரிய​வந்​துள்​ளது.

தேசிய நெடுஞ்​சாலை வழித்​தடங்​கள் தொலை​தூர மற்​றும் கிராமப்​புறப் பகு​தி​கள் வழி​யாகச் செல்​வ​தால், அந்​தப் பகு​தி​களில் நம்​பக​மான செல்​போன் நெட்​வொர்க் வசதி இல்​லாதது நெடுஞ்​சாலை செயல்​பாடு​கள், அவசர​கால மீட்பு நடவடிக்​கைகள் மற்​றும் தொழில்​நுட்​பம் சார்ந்த சேவை​களை வழங்​கு​வ​தில் சிரமம் ஏற்​படு​கிறது எனவே, இந்த விவ​காரத்​தில் மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை​யும் (டிஓடி) இந்​திய தொலைத்​தொடர்பு ஒழுங்​கு ​முறை ஆணை​ய​மும் (டி​ராய்) உடனடி​யாக தலை​யிட வேண்​டும்.

குறிப்​பாக, பசுமை வழிச் சாலைகள் மற்​றும் தொலை​தூரப் பகு​தி​களில் செல்​போன் நெட்​வொர்க் வசதியை மேம்​படுத்த விரை​வாக நடவடிக்கை எடுக்​கு​மாறு தொலைத்​ தொடர்பு சேவை நிறு​வனங்​களுக்கு உரிய உத்​தர​வு​களை பிறப்​பிக்க வேண்​டும். எந்​தெந்த பகு​தி​யில் நெட்​வொர்க் வசதி சரி​யாக இல்லை என்​பது தொடர்பான விரி​வான விவரம், டிஓடி, டிராய் அமைப்​புக்கு வழங்கப்​பட்​டுள்​ளது.

மேலும் கால்​நடைகள் நடமாட்​டம் அதி​கம் உள்ள பகு​தி​கள் மற்றும் இதர ஆபத்தான இடங்​கள் உள்​ளிட்ட விபத்து நேரிடக்​கூடிய பகுதிகள் குறித்த குறுஞ் ​செய்​தியை பயணி​களுக்கு அனுப்​பு​மாறு தொலைத் ​தொடர்பு நிறு​வனங்​களுக்கு டிராய் உத்​தர​விட வேண்டும் என்று கேட்​டுக்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்போன் நெட்வொர்க்கை மேம்படுத்த என்எச்ஏஐ கோரிக்கை
பிக்கிள்ஸ் எனும் ஹீரோ! | வரலாறு முக்கியம் மக்களே! - 32

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in