ஆந்திராவில் உள்ள சுரங்கத்தில் ஆண்டுக்கு 1,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு

ஆந்திராவில் உள்ள சுரங்கத்தில் ஆண்டுக்கு 1,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு
Updated on
1 min read

கர்னூல்: ஆந்திரா​வின் கர்​னூல் மாவட்​டம் ஜோனாகிரி தங்கச் சுரங்க திட்​டம் அடுத்த மாதம் செயல்​பாட்​டுக்கு வரு​கிறது. நாட்​டின் முதல் மிகப் பெரிய தனி​யார் தங்​கச் சுரங்​கம் திட்​டத்​தில் ஆண்டுக்கு 1,000 கிலோ தங்​கம் உற்பத்தி செய்​யப்​பட உள்ளது.

இந்​தியா தற்​போது ஆண்​டுக்கு 800 டன்​னுக்கு மேல் தங்கத்தை இறக்​குமதி செய்து வரு​கிறது. கர்​நாட​கா​வின் கோலார் தங்​கச் சுரங்​கம் கடந்த 2000-ம் ஆண்டு மூடப்​பட்ட நிலை​யில், தற்​போது கர்​நாட​கா​வின் ராய்ச்​சூர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி தங்​கச் சுரங்​கத்​தில் மட்​டும் ஆண்​டுக்கு 1.5 டன் தங்​கம் உற்​பத்தி செய்​யப்​படு​கிறது.

இந்​நிலை​யில் ஆந்​தி​ரா​வின் கர்​னூல் மாவட்​டத்​தில் ஜோனாகிரி, எர்​ராகுடி மற்​றும் பகி​தி​ராயி கிராமங்​களில் 598 ஹெக்​டேர் பரப்​பில் புதிய தங்க வயல் கண்டறியப்பட்டுள்​ளது. இங்கு 13.1 டன் முதல் 42.5 டன் அளவுக்கு தங்​கம் எடுக்​கலாம் என ஆய்​வு​கள் தெரிவிக்கின்​றன. இங்கு ஜியோமிசோர் சர்​வீஸஸ் இந்​தியா என்ற தனி​யார் நிறு​வனம் ரூ.400 கோடிக்கு மேல் முதலீடு செய்து தங்​கச் சுரங்​கம் அமைத்து வரு​கிறது.

இந்த தங்​கச் சுரங்​கத்​தில் அடுத்த மாதம் உற்​பத்தி தொடங்​க​வுள்​ளது. இதை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கிறார். இங்கு ஆண்​டுக்கு 1000 கிலோ தங்​கம் உற்​பத்தி செய்​யப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதன் மூலம் இந்​தி​யா​வின் தங்​கம் இறக்​குமதி குறை​யும்.

ஜோனாகிரி தங்​கச் சுரங்​கத் திட்​டம் வெற்றி பெற்​றால், இன்​னும் பல முதலீட்​டாளர்​கள் தங்​கச் சுரங்​க திட்​டத்​தில் முதலீடு செய்​வர், அடுத்த 10 ஆண்​டு​களில் 50 முதல் 100 டன் தங்​கம் உற்​பத்தி செய்ய இந்​தியா திட்​ட​மிட வேண்​டும் என ஜியோமிசோர் நிறு​வனத்​தின் இயக்​குனரும், டெக்​கான் கோல்ட் நிர்​வாக இயக்​குனரு​மான டாக்​டர் ஹனு​மன் பிர​சாத் கூறி​யுள்​ளார்​.​

ஆந்திராவில் உள்ள சுரங்கத்தில் ஆண்டுக்கு 1,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு
தொகுதி மறுவரையறையை ஸ்டாலின் எதிர்த்தது ஏன்? - கார்கே விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in