காஞ்சி, செங்கை மாவட்டங்களில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி!

மானியத் திட்டங்களை அறிவித்து ஊக்கப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
காஞ்சி, செங்கை  மாவட்டங்களில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி!
Updated on
2 min read

மதுராந்தகம்: ​காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் ஆண்​டு​தோறும் கரும்பு சாகுபடி பரப்​பளவு குறைந்து வரு​வ​தால், கரும்பு சாகுபடியை ஊக்​கப்​படுத்​தும் வகை​யில் மானிய திட்​டங்​களை அறிவிக்க வேண்​டும் என விவ​சா​யிகள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மது​ராந்​தகம் அடுத்த படாளம் கிராமத்​தில் கூட்​டுறவு சர்க்​கரை ஆலை அமைந்​துள்​ளது. இந்த ஆலை​யில், கடந்த 1961-ம் ஆண்டு ஆயிரம் டன்​கள் கரும்புகளுடன் அரவை தொடங்​கப்​பட்​டது. பின்​னர், கடந்த 1995-ம் ஆண்டு 2,500 டன்​கள் என விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டது.

மேலும், சில நிர்​வாக காரணங்​களால் கடந்த 2009-ம் ஆண்டு வரை ஆலை​யில் அரவை நிறுத்​தம் செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, கடந்த 2010-ம் ஆண்டு ரூ.33 கோடி அரசு நிதி உதவி​யுடன் மீண்​டும் கரும்பு அரவை தொடங்​கப்​பட்​டது. மேலும், கடந்த 2021-22-ம் ஆண்டு அரவை பரு​வத்​தில் 1. 92 லட்​சம் டன் கரும்பு அரைக்​கப்​பட்​டது.

இதே​போல், கடந்த 2022-23-ம் ஆண்டு அரவை பரு​வத்​தில் 2 லட்​சம் மெட்​ரிக் டன், 2023-24-ம் ஆண்டு பரு​வத்​தில்​1.61 லட்​சம் டன், 2024-25-ம் ஆண்​டில் 70 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், நடப்​பாண்​டான 2025-26-ம் ஆண்​டுக்​கான அரவை​யில் 3,200 ஏக்​கர் பரப்​பளவில் பயி​ரிடப்​பட்​டுள்​ள​தாக​வும்.

மேலும், 1 லட்​சம் டன் அரவை இலக்​காக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக ஆலை நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. இதன்​மூலம், கடந்த 5 ஆண்​டு​களாக காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் கரும்பு சாகுபடி பரப்​பளவு குறைந்து வரு​வது மேற்​கண்ட ஆலை நிர்​வாகத்​தின் தகவல்​கள் மூலம் தெரி​கிறது.

மேலும், கரும்பு சாகுபடி குறைவுக்கு அரசு வழங்​கும் தொகை குறைவு மற்​றும் வெட்​டுக்​கூலி நிர்​ணயம் செய்​யாததே காரணம் என விவ​சா​யிகள் குற்​றம் ​சாட்டு கின்​றனர். இதுகுறித்​து, விவ​சாயி கஜேந்​திரன் கூறிய​தாவது: கரும்புக்கு டன் ஒன்​றுக்கு ரூ.3,290 மற்​றும் மாநில அரசின் ஊக்​கத்​தொகை​யாக ரூ.349 வழங்​கப்​படு​கிறது. ஆனால், டன் ஒன்​றுக்கு சாகுபடி செலவு ரூ.4 ஆயிரம் செல​வாகிறது.

<div class="paragraphs"><p>கஜேந்திரன்</p></div>

கஜேந்திரன்

மேலும், கரும்பு வெட்​டுக்​கூலி​யாக டன்​னுக்கு ரூ.1,100 முதல் 1,500 வரை வழங்க வேண்​டி​யுள்​ளது. அதனால், கரும்பு சாகுபடியை விவ​சா​யிகள் மத்​தி​யில் ஊக்​கப்​படுத்​தும் வகை​யில் கவர்ச்​சிகர​மான திட்​டங்​களை அறிவிக்க வேண்​டியது அவசி​ய​மாகிறது.

இதில், முதலா​வ​தாக வெட்​டுக்​கூலியை அரசே நிர்​ணயம் செய்​து, டன்​னுக்கு விதை கரணை​யாக 3 முதல் 4 டன் கரணை​களை மானிய​மாக வழங்க வேண்​டும். மேலும், டன்​னுக்​கு ரூ. 5 ஆயிரம்​ வழங்​க வேண்​டும்​ என்​றார்​.

காஞ்சி, செங்கை  மாவட்டங்களில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி!
“திருமாவளவன், ராமதாஸ் போன்றோர்தான் பெரியார்!” - சீமான் உரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in