உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டங்களுக்குப் பாராட்டு: சிறு, குறு தொழில்முனைவோர் கருத்து

உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டங்களுக்குப் பாராட்டு: சிறு, குறு தொழில்முனைவோர் கருத்து
Updated on
1 min read

ஓசூர் / கிருஷ்ணகிரி: மத்​திய பட்​ஜெட்​டில் கடன் திட்​டங்​கள் இல்​லாதது ஏமாற்​றம் அளிப்​ப​தாக சிறு, குறுந் தொழில் ​முனை​வோர் தெரி​வித்​துள்ளனர். இது தொடர்​பாக ஓசூர் சிறு, குறு தொழிற்​சாலைத் தலை​வர் எஸ்​.மூர்த்தி கூறிய​தாவது: மத்​திய பட்​ஜெட்​டில் வெளி​நாட்டு இறக்​கும​தி​யைக் குறைத்​து, உள்​நாட்டு உற்பத்தியை ஊக்​குவிக்​கும் வகை​யில் அறிவிக்​கப்​பட்​டுள்ள சிறப்​புத் திட்​டங்​கள் பாராட்​டுக்​குரிய​வை.

மேலும், லித்​தி​யம் பேட்​டரி​களுக்​கான சுங்க வரி விலக்கு அளிக்​கப்​பட்​டிருப்​பது முக்​கிய​மான அறி​விப்​பாகும். இதன் மூலம் மின்​சார வாக​னங்​களின் உற்பத்தி மற்​றும் உள்​நாட்டு உற்பத்தி கணிச​மாக அதி​கரிக்​கும். அதே​போல, டிடிஎஸ் மற்​றும் ஜிஎஸ்டி தாக்​கல் செய்​வதற்​கான படிவங்​களை எளிமைப்​படுத்​து​வ​தாக அறி​வித்​திருப்​பதும் சிறு​தொழில் முனை​வோருக்கு மகிழ்ச்சி அளிக்​கிறது.

ஏமாற்​றங்​கள்: கடந்த ஆண்டு பட்​ஜெட்​டில் தொழில் வளர்ச்​சிக்கு ரூ.22,000 கோடி ஒதுக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், இம்​முறை வெறும் ரூ.10,000 கோடி மட்​டுமே ஒதுக்​கப்​பட்​டிருப்​பது வருத்​தம் அளிக்கிறது. கடந்த ஆண்​டுடன் ஒப்​பிடுகை​யில் இது மிக​வும் குறைவு. மேலும், சிறு தொழில்​களுக்​கான எளிமைப்​படுத்​தப்​பட்ட கடன் உதவித் திட்​டங்​கள் குறித்த அறி​விப்​பு​கள் இல்​லாததும் ஏமாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

அதே​போல, தமிழகத்​தில் முக்​கிய தொழில் நகர​மான ஓசூரின் உட்​கட்​டமைப்பை மேம்​படுத்​தும் வகையி​லான எந்த சிறப்​புத் திட்​ட​மும் பட்​ஜெட்​டில் அறிவிக்​கப்​பட​வில்​லை.குறிப்​பாக, விளைநிலங்​களைப் பாதிக்​காத வகையி​லான விமான நிலை​யம், ஓசூர்​-​திருப்​பத்​தூர் ரயில்வே வழித்​தடம், மெட்ரோ ரயில் நீட்​டிப்பு சேவை ஆகியவை குறித்த அறி​விப்​பு​கள் வராதது பெரும் ஏமாற்​றம் அளிக்​கிறது.

ஓசூரில் ஆட்​டோமொபைல் துறையைத் தாண்​டி, ராணுவத் தளவாட உற்பத்தித் தொழில்​களை அமைக்க வேண்​டும் என்ற எங்​களது தொடர் கோரிக்​கை​யும் இந்த பட்​ஜெட்​டில் மத்திய அரசால் கண்​டு​கொள்​ளப்​பட​வில்லை என்​பது வருத்தம் அளிக்​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

தேங்​காய் உற்பத்தி: கிருஷ்ணகிரி மாவட்​டம் அரசம்​பட்​டியைச் சேர்ந்த தென்னை ஆராய்ச்​சி​யாளர் கென்​னடி கூறும்​போது, “தேங்​காய் ஊக்​கத் திட்​டத்தை மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது. இந்​தத் திட்​டத்​தின் முக்​கிய நோக்​கம் உற்பத்தி மற்​றும் உற்பத்தித் திறனை உயர்த்​து​வ​தாகும்.

இதற்​காக, உற்பத்தி குறைந்த பழைய மற்​றும் பயனற்ற தேங்​காய் மரங்களை அகற்​றி, அதிக விளைச்​சல் தரக்​கூடிய புதிய நாற்றுகள் மற்​றும் மேம்​படுத்​தப்​பட்ட வகை தென்​னங்​கன்​றுகளை நடவு செய்​யும் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படும்” என்​றார்.

தேங்​காய் ஊக்​கத் திட்​டம்: தமிழக விவ​சா​யிகள் சங்க மாநிலத் தலை​வர் ராமக​வுண்​டர் கூறும்​போது, “தேங்​காய் ஊக்​கத் திட்​டம் தென்னை வளர்ச்​சிக்கு உதவும். உலக உணவு சந்தை இந்​தி​யாவை நோக்கி இருக்​கும் நேரத்​தில், உலக வேளாண் சந்தை விலைக்கு இந்​திய விளைபொருட்​களை ஏற்​றுமதி செய்​யாமல் இருப்​பது ஏமாற்​றம் அளிக்​கிறது” என்​றார்​.

உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டங்களுக்குப் பாராட்டு: சிறு, குறு தொழில்முனைவோர் கருத்து
விருத்தாசலம் | சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in