அடுத்த 6 ஆண்டுக்​குள் ரூ.12 லட்சம் கோடி முதலீடு: கவுதம் அதானி தகவல்

அடுத்த 6 ஆண்டுக்​குள் ரூ.12 லட்சம் கோடி முதலீடு: கவுதம் அதானி தகவல்
Updated on
1 min read

தன்​பாத்: அதானி ​குழு​மத்​தின் தலை​வர் கவுதம் அதானி கூறியதாவது: அடுத்த 6 ஆண்​டு​களில் உள்​கட்​டமைப்​பு, சுரங்​கம், புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தி, துறை​முகம் உள்​ளிட்ட துறை​களில் கணிச​மான அளவில் அதானி குழு​மம் முதலீடு செய்​ய​வுள்​ளது.

வளர்ச்சிக்​கான வாய்ப்​புள்ள துறை​களில் மட்​டும் 6 ஆண்​டு​களில் ரூ.10 லட்சம் கோடி முதல் ரூ.12 லட்​சம் கோடியை அதானி குழு​மம் முதலீடு செய்​யும்.

இந்​தி​யா​வின் புதிய சுதந்​திரத்தை உறுதி செய்ய பிரதமர் நரேந்​திர மோடி சுய​சார்பு திட்​டத்தை முன்​னெடுத்​துள்​ளார். அதற்கு ஏற்ற வகை​யில், இந்​திய கார்ப்​பரேட் நிறு​வனங்​களும், தொழில​திபர்களும் இணைந்து செயல்பட வேண்​டியது அவசி​யம். இதற்காகத்​ தான் ஒவ்​வொரு தொழில​திபரும் பாடு​படு​கிறார்​கள். இவ்வாறு கவுதம் அதானி கூறி​னார்.

அதானி குழு​மம் உலகின் மிகப்​பெரிய ரினீவபிள் எனர்ஜி பூங்காவை குஜ​ராத்​தின் கவ்​டா​வில் 520 சதுர கி.மீ. பரப்​பள​வில் அமைத்​துள்​ளது. வரும் 2030-ல் இது செயல்​பாட்​டுக்கு வரும்​போது 30 ஜிகா ​வாட் பசுமை எரிசக்​தியை உற்​பத்தி செய்​யும்.

அடுத்த 6 ஆண்டுக்​குள் ரூ.12 லட்சம் கோடி முதலீடு: கவுதம் அதானி தகவல்
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூக வலைதள தடை - ஆதரவும் எதிர்ப்பும் வலுப்பது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in