“ஏஐ மலி​வாக கிடைக்க ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்” - முகேஷ் அம்பானி

டெல்​லி​ ஏஐ உச்சி மாநாட்​டில் தகவல்
“ஏஐ மலி​வாக கிடைக்க ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்” - முகேஷ் அம்பானி
Updated on
1 min read

டெல்​லி​ ஏஐ உச்சி மாநாட்​டில் நேற்று பங்​கேற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்​ரீஸ் தலை​வர் முகேஷ் அம்பானி பேசியதாவது: சில ஆண்​டு​களுக்கு முன்பு இந்​திய மக்களை இணை​யதள யுகத்​துடன் எங்​கள் ஜியோ நிறுவனம் இணைத்​தது.

அது​போல இப்​போது இந்​தி​யாவை செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) யுகத்​துடன் ஜியோ இணைக்​கும். செல்​போன் மற்​றும் இணைய தரவு கட்​ட​ணங்​களை நாங்​கள் எந்த அளவுக்கு குறைத்​தோமோ அது​போல செயற்கை நுண்​ணறி​வுத் திறனுக்​கான செல​வை​யும் வெகு​வாக குறைப்​போம்.

இதற்​காக ரிலை​யன்ஸ் ஜியோ நிறு​வனம் அடுத்த 7 ஆண்டு​களில் ரூ.10 லட்​சம் கோடியை முதலீடு செய்​யும். இது வெறும் ஊக முதலீடு அல்ல. தேசத்தை கட்டியெழுப்பும் மூலதனம். இந்​தி​யா​வின் ஏஐ மாற்​றத்​தில் ஜியோ இன்​னும் பெரிய பங்கை வகிக்​கும்.

இணைய வசதியை எப்​படி தரம், நம்​பகத்​தன்மை மற்​றும் மிகக் குறைந்த விலை​யில் மாற்​றிய அமைத்​தோமோ, அதே​போல இதை​யும் ஜியோ செய்​யும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

“ஏஐ மலி​வாக கிடைக்க ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்” - முகேஷ் அம்பானி
புதிய கட்சியைத் தொடங்கிய பண்ருட்டியார் - பின்னணியில் தவெக?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in