தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டம்

தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் மது​பானங்​களின் விலை உயர்த்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

தமிழகத்​தில் தற்​போது 4,048 டாஸ்​மாக் மது​பானக் கடைகள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்த கடைகளில் நாளொன்​றுக்கு சராசரி​யாக ரூ.150 கோடிக்கு மது விற்​பனை நடை​பெறும். இந்த கடைகளில் விஸ்​கி, பிராந்​தி, வோட்​கா, ரம் போன்ற இந்​திய தயாரிப்பு வெளி​நாட்டு வகை மது​பானங்​கள், பீர், ஒயின் உள்​ளிட்ட மது​பானங்​கள் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில் டாஸ்​மாக் கடைகளில் விற்​பனை செய்​யப்படும் மது​பானங்​களின் விலையை உயர்த்த டாஸ்​மாக் நிர்​வாகம் திட்​ட​மிட்​டுள்​ளது.

அதன்​படி, சாதாரண மற்​றும் நடுத்தர வகை வெளி​நாட்டு மது​பானங்​கள் மற்​றும் பீர் உள்​ளிட்​ட​வற்​றின் விலையை ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. கடந்த திங்​கட்​கிழமை நடை​பெற்ற டாஸ்​மாக் நிர்​வாகத்​தின் வாரிய கூட்​டத்​தில் இது குறித்து விவா​திக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த கூட்​டத்​தில் மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்​வைத் துறை அமைச்​சர் கே. விக்​னேஷ், அரசு உயர​தி​காரி​கள் மற்​றும் டாஸ்​மாக் நிர்​வாக அதி​காரி​கள் இது குறித்து விவா​தித்​துள்​ளனர். மேலும் பார் உரிமம் 2 மாதங்​கள் நீட்​டிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் புதிய டெண்​டர் அறி​விப்பு மற்​றும் அதில் செய்ய வேண்​டிய மாற்​றங்​கள் குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது. இருப்​பினும், இறுதி முடிவு எடுக்​கப்​பட​வில்லை மற்​றும் உயர்​வின் அளவு இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்​லை. தமிழகத்​தில் கடைசி​யாக கடந்த 2024 பிப்​ர​வரி 1-ம் தேதி மது விலைகள் ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்​தப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

இது குறித்து டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகத்​தில் தவெக அரசு பொறுப்​பேற்​றவுடன், இந்​திய தயாரிப்பு வெளி​நாட்டு மது​பானங்​கள் மற்​றும் பீர் தயாரிக்​கும் நிறு​வனங்​களுக்கு உற்​பத்தி செய்​யப்​படும் ஒவ்​வொரு பெட்​டிக்​கும் கூடு​தல் கட்​ட​ணம் நிர்​ன​யித்​தது. இதனால் உற்​பத்தி மற்​றும் விநி​யோகச் செல​வு​கள் அதி​கரித்​துள்​ள​தாகக் கூறி, மது​பான ஆலை மற்​றும் பீர் உற்​பத்​தி​யாளர்​கள் சில்​லறை விலையை உயர்த்​து​மாறு அரசிடம் கோரிக்கை வைத்​தனர். ஆனால் இதை அரசு உடனடி​யாக ஏற்​க​வில்லை என்​றாலும், இந்த விவ​காரம் டாஸ்​மாக் நிர்​வாகக் குழுக் கூட்​டத்​தில் விவா​திக்​கப்​பட்​டது.

மேலும் தமிழக அரசு 717 டாஸ்​மாக் கடைகள் மூடிய​தால், வரு​வாய் இழப்பை ஈடு​கட்​டும் நோக்​கத்​துடன் இந்த விலை உயர்வு முன்​மொழிவு கொண்டு வரப்​பட்​டுள்​ளது. மேலும், எதிர்​காலத்​தில் டாஸ்​மாக் சில்​லறை மது​பான விற்​பனையை தனி​யார் நிறு​வனங்​களிடம் ஒப்​படைக்​கும் வாய்ப்பு குறித்​தும் கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​பட்​டது. ஆனால், இதற்கு நிதித்​துறை ஆதரவு அளிக்​க​வில்​லை.

தனி​யாருக்கு விற்​பனை உரிமை வழங்​கப்​பட்​டால், மாநில அரசின் மது​பான வரு​வாய் பாதிக்​கப்​படும் என நிதித்​துறை தரப்​பில் முன்​வைக்​கப்​பட்​டது. இந்த விலை உயர்வு குறித்து இன்று அல்​லது நாளை மீண்​டும் உயர்​மட்ட ஆலோ​சனை நடத்தி அறி​விப்பு வெளி​யிடப்​படலாம். அடுத்த வாரத்தில் புதி​ய விலை அமல்படுத்​தப்​படலாம். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டம்
அர்ஜெண்டினா த்ரில் வெற்றி: எகிப்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in