தமிழகத்தில் தேவையான எரிபொருள் கையிருப்பு: எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் தகவல்

தமிழகத்தில் தேவையான எரிபொருள் கையிருப்பு: எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் அனைத்து சில்​லறை விற்​பனை நிலை​யங்​களி​லும் பெட்​ரோல் மற்​றும் டீசல் இருப்பு போது​மான அளவு உள்​ள​தாக, தமிழகம், புதுச்​சேரி எண்​ணெய் தொழில்​துறை நிறு​வனங்​களுக்​கான மாநில ஒருங்​கிணைப்​பாளர் வி.சி.அசோகன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்​து, அவர் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: ஒட்டுமொத்த எரிபொருள் விநி​யோகம் சம்​பந்​தப்​பட்ட கிடங்​கு​களில் இருந்து சில்​லறை விற்​பனை நிலை​யங்​களுக்கு எந்​த​வித இடையூறும் இன்றி நடை​பெறுகிறது. எரிபொருள் விநி​யோகங்​கள் தொடர்ந்து கண்​காணிக்​கப்​படு​கின்​றன.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் நுகர்​வோர்​களின் எரிபொருள் தேவைக்​கேற்ப அனைத்து சில்​லறை விற்​பனை நிலை​யங்​களி​லும் எரிபொருள் இருப்பு இருக்​கிறது. எனவே, பொது​மக்​கள் பதற்றமடைய வேண்​டாம். எரிபொருளை அதிக இருப்பு வைக்க வேண்​டாம்.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி மக்​களுக்கு தடை​யின்றி எரிபொருளை விநி​யோகம் செய்​வதை உறுதி செய்ய எண்​ணெய் சந்தை நிறு​வனங்​கள் உறு​திபூண்​டுள்​ளன. இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேவையான எரிபொருள் கையிருப்பு: எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் தகவல்
மின்நுகர்வோர் குறை தீர்க்க முன்னுரிமை தர முதல்வர் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in