

நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ‘விக்சித் பாரத் சங்கல்ப் சமாவேஷ்' என்ற கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
இதில் பாஜக தொண்டர்களிடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ”எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார். மேற்கு ஆசிய போர் காரணமாக இந்தியாவுக்கு ‘பொருளாதார சுனாமி' காத்திருக்கிறது என்ற ராகுலின் எச்சரிக்கை அர்த்தமற்றது, கரோனா பெருந்தொற்று நோய் மற்றும் மேற்கு ஆசிய மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளது.
மக்களவையில் ராகுல் பேசும் போதெல்லாம், அடுத்த சில வாரங்களில் எல்லாம் அழியப் போகிறது, பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்று கூறுகிறார். ஆனால், இந்தியாவுக்கு அப்படி எந்த ஆபத்தும் இல்லை. மாறாக, ஆண்டுக்கு ஆண்டு உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.