

புதுவையில் 585 மதுபான கடைகள் உள்ளன. இவை அனைத்தும் இரவு 11மணிக்குள் மூட வேண்டும். 50-க்கும் I மேற்பட்ட ரெஸ்டோ பார்கள் உள்ளன. இவை நள்ளிரவு 12 மணிக்கு மூட வேண்டும். புத்தாண்டையொட்டி இவற்றை கூடுதலாக நள்ளிரவு 1 மணி வரை கலால் துறை சிறப்பு அனுமதியை அளித்துள்ளது. இதற்கு சிறப்பு தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எப்எல் 1, 2 மதுபார் அல்லாத சில்லறை விற்பனை நிலையங்கள் இன்று இரவு 11 முதல் 11.30 மணி வரை மது விற்பனை செய்ய ரூ.10 ஆயிரம், பாருடன் கூடிய எப்எல் 2 சில்லறை விற்பனை நிலையம் இரவு 11 முதல் நள்ளிரவு ஒரு மணி வரை மது விற்பனை செய்ய ரூ.20 ஆயிரம், எப்எல் 2 சுற்றுலா மது விற்பனை பிரிவுக்கு இரவு 12 முதல் ஒரு மணி வரை மது விற்பனை செய்ய ரூ.10 ஆயிரம், இதர சிறப்பு நிகழ்ச்சிகளில் இரவு 11 மணி முதல் ஒரு
மணி வரை மது விற்பனை செய்ய ரூ.30 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலால்துறையில் இதற்காக விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் மதுவிற்பனை செய்யக்கூடாது என கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.