100 மி.கி. மேல் நிமிசுலைட் உள்ள மருந்​து தயாரிக்க, விற்க தடை

100 மி.கி. மேல் நிமிசுலைட் உள்ள மருந்​து தயாரிக்க, விற்க தடை
Updated on
1 min read

புதுடெல்லி: வலி நிவாரணி, காய்ச்​சல், அழற்சி எதிர்ப்பு போன்றவற்​றுக்கு நிமிசுலைட் பயன்படுத்தப்படு​கிறது. இது மாத்​திரை, கேப்​சூல், சிரப் என 3 வகை​களில் உள்​ளன.

ஆனால், இந்த மாத்​திரைகளில் 100 மி.கி. மேல் நிமிசுலைட் வேதிப் பொருள் கலந்​திருப்​ப​தால் மக்​களுக்கு பல்​வேறு பின்​விளைவு​கள் ஏற்​படு​வது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்து நிமிசுலைட் கலந்த மாத்​திரைக்கு மத்திய சுகாதாரத் துறை தடை விதித்துள்​ளது.

இந்​திய மருத்​துவ ஆராய்ச்​சிக் கவுன்​சில் (ஐசிஎம்​ஆர்) அளித்த பரிந்​துரையை ஏற்று மத்​திய சுகா​தா​ரத் துறை அமைச்​சகம், நிமிசுலைட் மாத்​திரை, சிரப்​புக்கு தடை விதித்து நேற்று அறி​விப்பு வெளி​யிட்​டது.

பொது நலன் கருதி இந்த மாத்​திரைகளுக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், இனிமேல் இந்த மருந்​துகளை தயாரிக்​க​வும், விற்​க​வும், விநி​யோகம் செய்​ய​வும் உடனடி​யாக தடை விதிக்​கப்​படு​கிறது என்றும் மத்​திய சுகா​தா​ரத் துறை தெரிவித்துள்ளது.

பெங்​களூரு​வில் புத்​தாண்​டையொட்டி பலத்த பாது​காப்பு: மது குடித்​தவர்​களை வீட்​டில் இறக்​கி​விட ஏற்​பாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in