காமராஜர் துறைமுகத்தில் 2047-ம் ஆண்டுக்குள் 254 மில்லியன் டன் சரக்குகள் கையாளும் அளவுக்கு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

காமராஜர் துறைமுகத்தில் 2047-ம் ஆண்டுக்குள் 254 மில்லியன் டன் சரக்குகள் கையாளும் அளவுக்கு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
Updated on
1 min read

சென்னை: தமிழக முன்​னாள் முதல்​வர் காம​ராஜரின் 124-வது பிறந்த நாளை​யொட்​டி, எண்​ணுார் காமராஜர் துறை​முகத்​தில் அவரது திரு​வுரு​வப் படத்​துக்​கு, காமராஜர் துறை​முகத்​தின் நிர்​வாக இயக்​குநர் ஐரீன் சிந்​தியா மாலை அணி​வித்​து, மரி​யாதை செலுத்​தி​னார்.

பின்​னர், அவர் கூறிய​தாவது: முன்​னாள் முதல்​வர் காம​ராஜரின் எளிமை, நேர்​மை, தொலைநோக்​குப் பார்வை மற்​றும் நாட்​டுக்​காக அவர் ஆற்​றிய தன்​னலமற்ற பொதுச் சேவை மகத்​தானது.

கல்வி விரி​வாக்​கம் மற்​றும் பள்ளி மாணவர்​களுக்​கான மதிய உணவுத் திட்​டம் உள்​ளிட்ட பல்​வேறு மக்​கள் நலத் திட்​டங்​களை முன்​னெடுத்​து, தமிழக கல்வி மற்​றும் சமூக முன்​னேற்​றத்​துக்கு அழி​யாத பங்​களிப்பை வழங்​கிய​வர்.

அவரது லட்​சி​யங்​களை வழி​காட்​டு​தலாகக் கொண்​டு, நிலை​யான வளர்ச்​சி, செயல்​திறன் மேம்​பாடு மற்​றும் நாட்​டின் வளர்ச்​சிக்​கான தனது பங்​களிப்பை மேலும் வலுப்​படுத்​து​வ​தில் காம​ராஜர் துறை​முக நிறு​வனம் உறு​திபூண்டுள்ளது.

காமராஜர் துறை​முகம் கடந்த நிதி​யாண்​டில், 49.08 மில்​லியன் மெட்​ரிக் டன் சரக்​கு​களை கையாண்​டு, ரூ.1,280 கோடி வரு​வாயை ஈட்​டி​யுள்​ளது. இந்த வளர்ச்​சியை அடிப்​படை​யாக கொண்​டு, ‘மாஸ்​டர் பிளான் 2047’-ஐ தயாரித்​துள்​ளது.

இதன்மூலம், வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் 254.52 மில்​லியன் டன் ஆக உயர்த்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்​கான, கட்​டமைப்​பு​களை உரு​வாக்​கு​வது, சரக்கு கையாளும் திறன் விரி​வாக்​கம், சாலை, ரயில் உள்​ளிட்ட பன்​முக போக்​கு​வரத்து இணைப்பு வலுப்​படுத்​து​வது போன்ற பணி​களை மேற்​கொள்​ளப்​படு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

காமராஜர் துறைமுகத்தில் 2047-ம் ஆண்டுக்குள் 254 மில்லியன் டன் சரக்குகள் கையாளும் அளவுக்கு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
கோட்டூர்புரத்தில் தெரு நாய் கடித்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in