போர் காரணமாக மருந்து ஏற்றுமதி பாதிப்பு: நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி இழப்பு அபாயம்

போர் காரணமாக மருந்து ஏற்றுமதி பாதிப்பு: நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி இழப்பு அபாயம்
Updated on
1 min read

புதுடெல்லி: இஸ்​ரேலுக்​கும் ஈரானுக்​கும் இடையி​லான போர் இறக்​குமதி, ஏற்​றும​தி​யில் மிகப்​பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்தி வருகிறது. ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடு​வ​தாக ஈரான் அச்​சுறுத்​தி​யிருப்​பதே இதற்கு காரணம். ஏனெனில், மத்​திய கிழக்கு மற்​றும் தெற்​காசிய நாடு​களுக்கு இடையி​லான இறக்​குமதி மற்​றும் ஏற்​றும​திக்​கான முக்​கிய கடல் பாதை​யாக ஹார்​முஸ் ஜலசந்தி உள்​ளது.

மத்​திய கிழக்​கில் 3 நாடு​களுக்கு இடையி​லான போர் காரண​மாக, உலகளா​விய சரக்​கு​களுக்​கான ஏற்​றும​தி, இறக்​குமதி செல​வு​கள் அதி​கரித்​துள்​ளன. இதுகுறித்து இந்​திய மருந்து ஏற்​றுமதி மேம்​பாட்டு கவுன்​சிலின் தலை​வர் நமித் ஜோஷி கூறியதாவது: வளை​குடா ஒத்​துழைப்பு கவுன்​சில் (ஜிசிசி) உறுப்பு நாடு​கள் இந்​திய மருந்து நிறு​வனங்​களின் மொத்த ஏற்​றும​தி​யில் 5.58 சதவீதத்​தைக் கொண்​டுள்​ளன. மேற்கு ஆசியா மற்​றும் வடஆப்​பிரிக்கா பிராந்​தி​யத்​திற்​கான மருந்து ஏற்​றும​தி​யின் மதிப்பு 2024-25 நிதி​யாண்​டில் 1,749.6 மில்​லியன் டால​ராக அதி​கரிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

சவுதி, ஓமன், குவைத் மற்​றும் ஏமன் போன்ற முக்​கிய சந்​தைகள் மலிவு விலை​யில், பொது​வான மருந்​துகளை வாங்​கு​வதற்கு இந்​தி​யாவை பெரிதும் நம்​பி​யுள்​ளன. ஜோர்​டான், குவைத் மற்​றும் லிபியா போன்ற வளர்ந்து வரும் சந்​தைகளுக்​கான ஏற்​றும​தி​யும் சமீப கால​மாக அதி​கரித்​துள்​ளது. இந்​நிலை​யில் மத்​திய கிழக்​கில் ஏற்​பட்​டுள்ள போர்ச் சூழல் இந்​திய மருந்து ஏற்​று ம​தியை பாதிக்​கலாம் என கூறப்​படு​கிறது.

இறக்​குமதி மற்​றும் ஏற்​றுமதி இரண்​டிற்​கும் சரக்கு வரியும் இரண்டு மடங்காகி உள்ளது. இவை, மருந்து ஏற்​றுமதி நிறு​வனங்​களை மிகுந்த அழுத்​தத்​திற்கு உள்​ளாக்​கு​கின்​றன. மேற்கு ஆசி​யா​வில் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடி காரண​மாக மார்ச் மாதத்​தில் ஏற்​றும​தி​கள் முற்​றி​லு​மாக பாதிக்​கப்​பட்​டால், மருந்து தொழில்​துறை 5,000 கோடி ரூபாய் வரை இழப்​பு​களை சந்​திக்க நேரிடும்.

மருந்து ஏற்​றும​தி​யாளர்​களுக்​கான சரக்கு நிவாரணம், மானி​யங்​கள் மற்​றும் தளவாட ஆதரவு போன்ற நடவடிக்​கைகளை மத்​திய அரசு பரிசீலிக்க வேண்​டும். மத்​திய அரசின் உதவி​யால் மட்​டுமே ஏற்​பட​விருக்​கும் இழப்​பு குறை​யும்​. இவ்​வாறு நமித்​ ஜோஷி தெரி​வித்​துள்​ளார்​.

போர் காரணமாக மருந்து ஏற்றுமதி பாதிப்பு: நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி இழப்பு அபாயம்
“சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு” - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in