ஈரான் போர் தாக்கம்: இந்திய ஏற்றுமதி துறைக்கு ரூ.92,000 கோடி பாதிப்பு

ஈரான் போர் தாக்கம்: இந்திய ஏற்றுமதி துறைக்கு ரூ.92,000 கோடி பாதிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்கா, இஸ்​ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து நீடிக்​கும் போர் காரண​மாக, ஹார்​முஸ் நீரிணை பகு​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து தடைபட்​டுள்​ள​தால் கச்சா எண்​ணெய் விலை பன்​ மடங்கு உயர்ந்து வரு​கிறது.

இது அனைத்து துறை​களின் வளர்ச்​சி​யிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மத்​திய கிழக்​கில் நடை​பெறும் இந்த போர் பதற்​றம் காரண​மாக, இந்​தி​யா​வின் சரக்கு ஏற்​றுமதி ரூ.75 ஆயிரம் கோடி முதல் ரூ.92 ஆயிரம் கோடி வரை பாதிப்பை சந்​திக்​கக்​கூடும் என்று ஏற்​றும​தி​யாளர்​கள் சங்​கங்​கள் தெரி​வித்​துள்​ளன. மேற்கு ஆசி​யா​வில் நில​வும் மோதல் சூழல் ஏற்​கெனவே ஆர்​டர்​கள், கப்பல் கட்​ட​ணம் மற்​றும் சரக்கு நகர்​வு​களை பாதித்து வரு​வ​தாக அவர்​கள் கூறுகின்​றனர்.

இந்த இடையூறுகள் தொடர்ந்​தால், மார்ச் மாத ஏற்​றும​தி​யிலும், ஒட்​டு மொத்த 2026 நிதி​யாண்​டின் ஏற்​றுமதி புள்​ளி ​விவரங்களிலும் இதன் தாக்​கம் வெளிப்​படை​யாகத் தெரி​யும் என்று தொழில் துறை பிர​தி​நி​தி​கள் தெரி​வித்​துள்​ளனர். சரக்கு போக்​கு​வரத்து செலவு கடுமை​யாக உயர்ந்​துள்​ள​தாக​வும், கப்​பல் நிறு​வனங்​கள் ஒரு ஷிப்​மெண்​டுக்கு ரூ.1.38 லட்​சம் முதல் முதல் ரூ.3.69 லட்​சம் வரை கூடு​தல் கட்​ட​ணம் விதிப்​ப​தாக​வும் ஏற்றுமதியாளர்​கள் கவலை தெரி​வித்​துள்​ளனர்.

ஈரான் போர் தாக்கம்: இந்திய ஏற்றுமதி துறைக்கு ரூ.92,000 கோடி பாதிப்பு
பாஜகவின் ‘பிஹார் மாடல்’ அரசியல் தாக்கம் - ‘அலர்ட்’ ஆகிறாரா பழனிசாமி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in