இந்தியா - வளை​குடா கவுன்சில் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்​சு தொடக்​கம்

இந்தியா - வளை​குடா கவுன்சில் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்​சு தொடக்​கம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வும் 6 மத்​திய கிழக்கு நாடு​களின் கூட்​டமைப்​பான வளை​குடா ஒத்​துழைப்பு கவுன்​சிலும் (ஜிசிசி) தடையற்ற வர்த் தக ஒப்​பந்​தம் தொடர்​பான பேச்​சு​வார்த்​தைகளைத் தொடங்​கு​வதற்​கான விதி​முறை​களில் நேற்று கையெழுத்​திட்​டன.

இந்த விதி​முறை​கள், முன்​மொழியப்​பட்ட வர்த்தக ஒப்​பந்தத்​தின் நோக்​கம் மற்​றும் வழி​முறை​களை வரையறுக்கின்​றன. மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் முன்​னிலை​யில் இந்த கையெழுத்து நிகழ்ச்சி நடை​பெற்​றது. இந்த ஒப்​பந்​தம் இருதரப்பு வர்த்​தகம் மற்​றும் முதலீடு​களை அதி​கரிக்க உதவும் என்று அமைச்​சர் கோயல் தெரி​வித்​தார்.

சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம், கத்​தார், குவைத், ஓமன் மற்​றும் பஹ்ரைன் ஆகிய 6 நாடு​கள் இந்த கவுன்​சிலில் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்​தியா ஏற்​கெனவே மே 2022-ல் ஐக்​கிய அரபு அமீரகத்​துடன் வர்த்தக ஒப்பந்தத்தை அமல்​படுத்​தி​யுள்​ளது. மேலும், டிசம்​பர் 18, 2025 அன்று ஓமனுடன் விரி​வான பொருளா​தார கூட்டு ஒப்பந்​தத்​தில் கையெழுத்​திட்​டது.

இந்தியா - வளை​குடா கவுன்சில் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்​சு தொடக்​கம்
“கமல் பேச்சு ... புரிஞ்சா எனக்கு சொல்லுங்க...” - வானதி சீனிவாசன் கிண்டல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in