

சர்வேதச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா
புதுடெல்லி: சர்வேதச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஏஐ மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களால் உலகளவில் 40 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும். ஆரம்பநிலை பணியிடங்கள் ஏஐ வரவால் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
இது முதல் வேலையைத் தேடும் இளம் பட்டதாரிகளுக்குப் சவாலாக அமையும். மேம்பட்ட பொருளாதார நாடுகளில் இந்த பாதிப்பு 60 சதவீதம் வரை இருக்கலாம். ஆனால், இந்தியாவில் இது 26 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.