

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் இன்று (மார்ச் 16) பவுனுக்கு ரூ.400 என விலை சரிந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக சர்வதேச நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலித்து வருகிறது.
கடந்த 11-ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.1,20,960 என இருந்தது. அதற்கடுத்த நாள் முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்தது. 5 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,280 வரை சரிந்துள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,710-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,17,680-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,28,376-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளியை பொறுத்தவரையில் கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.276-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ கட்டி விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,76,000-க்கு விற்பனை ஆகிறது.