தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உச்சம்

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உச்சம்
Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் நேற்று ஒரே ​நாளில் ஆபரணத் தங்​கத்​தின் விலை பவுனுக்கு ரூ.4,120 உயர்ந்​து, ஒரு பவுன் ரூ.1,15,320-க்கு விற்​பனை​யானது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்​பு, சர்வதேச அரசியல் சூழல் ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. கடந்த டிசம்​பர் மாதம் முதல் தங்​கம் விலை உயர்ந்து வரு​கிறது. டிச.15-ம் தேதி முதல் ​முறை​யாக ஒரு பவுன் ரூ.1 லட்​சத்​தைத் தாண்​டி விற்பனையானது.

இந்​தச் சூழலில் கடந்த சில நாட்​களாக ராக்​கெட் வேகத்தில் விலை ஏறிய தங்​கம், நேற்று முன்​தினம் ரூ.1.11 லட்​சத்​தைக் கடந்​தது. அதன் தொடர்ச்சி​யாக நேற்றும் விலை அதி​கரித்​து, கிராம் ஒன்​றுக்கு ரூ. 515 உயர்ந்து ரூ.14,415-க்​கும், பவுனுக்கு ரூ.4,120 உயர்ந்​து, ஒரு பவுன் ரூ.1 லட்​சத்து 15,320-க்​கும் விற்​பனை​யாகி புதிய வரலாறு படைத்​துள்​ளது.

அதே​போல், 24 காரட் சுத்த தங்​கம் ஒரு பவுன் ரூ.1 லட்​சத்து 25,800-க்கு விற்​கப்​பட்​டது. கடந்த 5 நாட்​களில் மட்​டும் பவுனுக்கு சுமார் ரூ.9,480 வரை விலை கூடி​யுள்​ளது.

தங்​கத்தை போலவே வெள்ளி விலை​யும் நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.5,000 அதி​கரித்​தது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3 லட்​சத்து 45 ஆயிரத்​துக்கு விற்​பனை​யானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.345-க்கு விற்கப்​பட்​டது.

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உச்சம்
பிரதமர் மோடி நாளை சென்னை வருகை - மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in