பொன்னேரியில் ‘கதிசக்தி’ பன்முக சரக்கு முனையம்: 1,389 கிமீ பயணிக்கும் முதல் சரக்கு ரயில் சேவை தொடக்கம்

பொன்னேரியில் ரூ.50 கோடியில் பன்முக சரக்கு முனையம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

பொன்னேரியில் ரூ.50 கோடியில் பன்முக சரக்கு முனையம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Updated on
1 min read

சென்னை: பொன்​னேரி​யில் 2-வது ‘கதி-சக்​தி’ பன்​முக சரக்கு முனை​யத்தை சென்னை ரயில்வே கோட்​டம் அமைத்​து, பயன்​பாட்​டுக்கு கொண்டு வந்​தது. 45 பெட்டிகள் கொண்ட முதல் சரக்கு ரயில் சேவை தொடங்கி வைக்​கப்​பட்​டது.

நாட்​டின் உள்​கட்​டமைப்பு திட்​டங்​களை ஒருங்​கிணைத்​து, தளவாட செல​வு​களை குறைத்​து, இணைப்பை மேம்​படுத்​தும் ஒரு முன்​முயற்​சியே கதிசக்தி திட்​டம். இத்​திட்​டத்​தின்​படி சாலைகள், ரயில்​வே, விமான நிலை​யங்​கள், துறை​முகங்​கள், நீர்​வழிகள் உள்பட பல வகை​யான உள்​கட்​டமைப்​பு​கள் மேம்​படுத்​தப்​படு​கின்​றன. இதன் ஒரு பகு​தி​யாக, ரயில்​வே​யில் சரக்கு போக்​கு​வரத்து மேம்​படுத்​தப்​படு​கிறது.

அந்​தவகை​யில், அரக்​கோணத்​தில் பன்​முக சரக்கு முனை​யம் அமைக்​கப்​பட்​டிருந்​தது. இதன் தொடர்ச்​சி​யாக, பொன்​னேரி அருகே அனுப்​பம்​பட்டு கிராமத்​தில் ரூ.50 கோடி​யில் கதிசக்தி மல்​டி​மாடல் (பன்​முக) சரக்கு முனை​யத்தை தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டம் அமைத்​தது.

இந்த முனை​யம் சிகல் மல்​டி ​மாடல் மற்​றும் ரயில் டிரான்​ஸ்​ போர்ட் லிமிடெட் (Sical Multimodal and Rail Transport Ltd) நிறு​வனத்​தால் உரு​வாக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், இந்த முனை​யம் நேற்று முன்​தினம் பயன்​பாட்​டுக்கு வந்​தது.

இம்​முனை​யத்​திலிருந்து தென்​கிழக்கு ரயில்​வே​யின் கிரீன் ஃபீல்ட் தனி​யார் சரக்கு முனை​யத்​துக்கு 45 பெட்​டிகள் கொண்ட முதல் சரக்கு ரயில் சேவையை தெற்கு ரயில்​வே​யின் கூடு​தல் பொது மேலா​ளர் விபின் குமார் தொடங்கி வைத்​தார்.

1,389 கிமீ பயணிக்​கும் இந்த ரயி​லின் மூலம் ரூ.14.80 லட்​சம் வரு​வாய் ஈட்​டப்​பட்​டுள்​ளது. இந்​நிகழ்​வில் தெற்கு ரயில்​வே​யின் முதன்மை தலைமை வணிக மேலா​ளர் ஜே.​வினயன், சென்னை கோட்ட ரயில்வே மேலா​ளர் சைலேந்​திர சிங், தலைமை சரக்கு போக்​கு​வரத்து மேலா​ளர் ஆர். முரு​க​ராஜ், கூடு​தல் கோட்ட ரயில்வே மேலா​ளர் தேஜ் பர்​தாப் சிங் பங்​கேற்​றனர்.

இது குறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறும்​போது, “இங்குள்ள வசதிகள் மூலம் ஆரம்​பக்​கட்​ட​மாக மாதத்​துக்கு 21 சரக்கு ரயில்​களைக் கையாள முடி​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இது இப்​பகு​தி​யின்​ முக்​கிய தளவாட மைய​மாக தி​கழும்​” என்​றனர்​.

<div class="paragraphs"><p>பொன்னேரியில் ரூ.50 கோடியில் பன்முக சரக்கு முனையம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது.</p></div>
எஸ்ஐஆர் பணியின்போது இறந்த வாக்காளர்களை உயிர்ப்பிக்க கூடாது: ஜெயக்குமார் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in