ரூ​பாய் மதிப்பை உயர்த்த அரசு எடுத்த நடவடிக்​கைகளால் ரூ.66,000 கோடியை எட்​டிய அந்நிய முதலீடு

எஸ்​பிஐ ஆய்வு அறிக்​கை​யில் தகவல்
ரூ​பாய் மதிப்பை உயர்த்த அரசு எடுத்த நடவடிக்​கைகளால் ரூ.66,000 கோடியை எட்​டிய அந்நிய முதலீடு
Updated on
1 min read

புதுடெல்லி: ரூபாய் மதிப்பை உயர்த்த அரசு எடுத்த நடவடிக்கைகள் காரண​மாக, இந்​தி​யா​வுக்கு ரூ.66 ஆயிரம் கோடி அந்​நிய முதலீடு கிடைத்​துள்​ள​தாக எஸ்​பிஐ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்​பாக எஸ்​பிஐ ஆய்வு வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்​ப​தாவது: மேற்கு ஆசிய போர் காரண​மாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்​த​தால், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு தொடர்ந்து சரிந்​தது. கடந்த 2026 மே 20ம் தேதி மிகக் குறைந்த அளவான ரூ.96.8 என்ற நிலையை எட்டியது.

மேலும் வெளி​நாட்டு முதலீடு​கள் இந்​தி​யா​விலிருந்து அதிக அளவில் (சு​மார் ரூ.2.6 லட்​சம் கோடி) வெளி​யேறின. இந்​நிலை​யில், வெளி​நாட்டு முதலீடு​களை அதி​கரிக்​க​வும் ரூபாய் மதிப்பை உயர்த்​த​வும் மத்​திய அரசும் இந்​திய ரிசர்வ் வங்​கி​யும் கடந்த மாதம் பல புதிய நடவடிக்​கைகளை அறி​முகப்​படுத்​தின.

கடன் பத்​திரங்​கள் மீதான வரி​களி​லிருந்து வெளி​நாட்டு நிறுவன முதலீட்​டாளர்​கள் (எப்​ஐஐ) மற்​றும் வெளி​நாட்டு போர்ட்​போலியோ முதலீட்​டாளர்​களுக்கு (எப்​பிஐ) விலக்கு அளிப்​பது, எப்​சிஎன்​ஆர் (பி)வைப்​புத் ​தொகைகளுக்​கான ஹெட்​ஜிங் செல​வு​களுக்கு மானியம் வழங்​கு​வது, பொதுத்​துறை நிறு​வனக் கடன்​களுக்​கான சலுகை டாலர்​-ஸ்​வாப் விண்டோ உள்​ளிட்​டவை இந்த நடவடிக்​கை​களில் குறிப்​பிடத்​தக்​கவை ஆகும்.

இதன் காரண​மாக ஜூன் மாத இறு​திக்​குள் ரூபா​யின் மதிப்பு சுமார் 2.2% உயர்ந்​தது. இது​போல வெளி​நாட்டு முதலீடு சுமார் ரூ.66 ஆயிரம் கோடிக்கு மேல் அதி​கரித்​துள்​ளது. மேலும் ஜூன் 30ம் தேதி​யுடன் முடிவடைந்த 2 வார காலத்​தில், வங்கி அமைப்​பில் உள்ள வைப்​புத்​தொகை சுமார் ரூ.7 லட்​சம் கோடி அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

ரூ​பாய் மதிப்பை உயர்த்த அரசு எடுத்த நடவடிக்​கைகளால் ரூ.66,000 கோடியை எட்​டிய அந்நிய முதலீடு
விரைவில் பயன்பாட்டுக்கு வரும் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in