

துபாய்: ‘டிபி வேர்ல்ட்’ பன்னாட்டு சரக்கு கன்டெய்னர்கள் போக்குவரத்து நிறுவனமாகும். இது உலகளவிலான சரக்கு கன்டெய்னர் போக்குவரத்தில் 10 சதவீத பங்கு வகிக்கிறது.
இந்நிறுனத்தில் இயக்குநர்கள் வாரிய தலைவராக சுல்தான் அகமது பின் சுலயம் இருந்தார். இவருக்கும் சிறுமிகளை பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்திய அமெரிக்காவின் ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருந்தது எப்ஸ்டீன் கோப்புகள் மூலம் அம்பலமானது. இதையடுத்து நிறுவனத்தை விட்டு சுல்தான் வெளியேறினார்.
இதையடுத்து டிபி வேர்ல்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யுவராஜ் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 79 நாடுகளில் செயல்படும் இந்நிறுவனத்தில் 1,15,000 பேர் பணியாற்றுகின்றனர்.