இந்திய கடற்படை நீர்மூழ்கிகளுக்காக ரூ.4,666 கோடி மதிப்பில் 48 ஏவுகணை வாங்க ஒப்பந்தம்

இந்திய கடற்படை நீர்மூழ்கிகளுக்காக ரூ.4,666 கோடி மதிப்பில் 48 ஏவுகணை வாங்க ஒப்பந்தம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய கடற்​படை​யின் நீர்​மூழ்​கி​களுக்​காக அதிநவீன ஏவு​கணை​கள் மற்​றும் இந்​திய ராணுவத்​துக்​காக அதிநவீன ஆயுதங்​களை வாங்க ரூ.4,666 கோடி​யில் இரு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி உள்​ளன.

இந்​திய கடற்​படை​யில் கல்​வாரி, கண்​டேரி, கரஞ்ச், வேலா, வகிர், வாக்​சீர் ஆகிய 6 நீர்​மூழ்​கி​கள் இணைக்​கப்​பட்டு உள்​ளன. இவை பிரான்ஸ் தொழில்​நுட்​பத்​தில் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட நீர்​மூழ்​கி​கள் ஆகும். இந்த நீர்​மூழ்​கி​களில் 48 அதிநவீன ஏவு​கணை​களை பொருத்த திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது.

இதற்​காக மத்​திய பாது​காப்​புத் துறை சார்​பில் இத்​தாலியை சேர்ந்த வாஸ் நிறு​வனத்​துடன் டெல்​லி​யில் நேற்று ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி வரும் 2028 ஏப்​. முதல் 2030-க்​குள் கருப்பு சுறா வகையை சேர்ந்த 48 ஏவு​கணை​களை வாஸ் நிறு​வனம் இந்​தி​யா​விடம் வழங்க உள்​ளது. இந்த ஏவு​கணை​கள், கடலுக்​குள் மூழ்கி செல்​லும் நீர்​மூழ்​கி​களை மிகத் துல்​லிய​மாக தாக்கி அழிக்​கும் திறன் கொண்​ட​வை.

மேலும் இந்​திய ராணுவ வீரர்​களுக்​காக அதிநவீன ஆயுதங்​கள், பாது​காப்பு உபகரணங்​களை வாங்க புனேவை சேர்ந்த பிஎப்​எல் நிறு​வனம், அதானி குழு​மத்​தின் பிஎல்​ஆர் சிஸ்​டம்ஸ் நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்டு உள்​ளது.

ரூ.4,666 கோடி மதிப்​பிலான இரு ஒப்​பந்​தங்​களும் மத்​திய பாது​காப்​புத் துறை செய​லா​ளர் ராஜேஷ் குமார் சிங்​ முன்​னிலை​யில்​ கையெழுத்​தாகின.

இந்திய கடற்படை நீர்மூழ்கிகளுக்காக ரூ.4,666 கோடி மதிப்பில் 48 ஏவுகணை வாங்க ஒப்பந்தம்
காதலியை மணக்கிறார் பிரியங்கா மகன் ரெஹான்: ராஜஸ்தானில் இன்று நிச்சயத்தார்த்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in