உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அனில் அகர்வால் வலியுறுத்தல்

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அனில் அகர்வால் வலியுறுத்தல்
Updated on
1 min read

புது டெல்லி: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

ஈரான் - இ்ஸ்ரேல் போரால் நமது எரிபொருள் தேவைக்கு மாற்று நடவடிக்கை களை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இந்த இக்கட்டான சூழலில் இத்துறையை உடனடியாக தேசிய முன்னுரிமைப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுடன் சிக்கலான நடைமுறைகளைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதுள்ள முற்போக்கான அரசால் இதைச் சாத்தியப்படுத்த முடியும்.இவ்வாறு அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அனில் அகர்வால் வலியுறுத்தல்
அசாம் சுகோய் விமான விபத்தில் 2 பைலட் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in