Published : 28 May 2023 04:15 AM
Last Updated : 28 May 2023 04:15 AM

குறைந்த விலையில் பிரீமியம் தரத்தில் ஆண்களுக்கான வாக்கரூ பிளஸ் புதிய வகை காலணிகள் அறிமுகம்

சென்னை: இந்தியாவில் காலணி தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் வாக்கரூ, ஆண்களுக்கான மிகவும் நேர்த்தியாக மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட புதிய வகை `வாக்கரூ பிளஸ்' காலணிகளை அறிமுகம் செய்துள்ளது.

குறைந்த விலையில் நீண்ட நாட்கள் உழைக்கும் தன்மை, சிறந்த தரம் ஆகியவற்றுடன் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இவை உள்ளன. இது காலணி சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். புதிய காலணிகள் அறிமுகம் குறித்து வாக்கரூ இன்டர் நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவுஷாத் கூறும்போது, எங்களின் புதிய வாக்கரூ பிளஸ் காலணித் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

மேலும் குறைந்த விலையில் பிரீமியம் ரக காலணிகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவைகளை இவை நிச்சயம் பூர்த்தி செய்யும். இந்த ரகங்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். எங்களின் நிபுணத்துவ மிக்க வடிவமைப்பு குழு ஒவ்வொரு காலணியையும் மிகுந்த கவனத்துடன் மிகவும் நுணுக்கமாக வடிவமைத்துள்ளது என்று தெரிவித்தார்.

நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் குரியன் கூறும்போது, குறைந்த விலையில் பிரீமியம் தர காலணிகளை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பு கின்றனர். போட்டி நிறைந்த காலணி சந்தையில் எங்களை நிலைநிறுத்திக் கொள்ள எங்களின் புதிய வாக்கரூ பிளஸ் காலணிகள் அதிநவீன வடிவமைப்பு மற்றும் பிரீமியம் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

வாக்கரூ பிளஸ் காலணிகளுக்கு கேரளாவில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய காலணி ரகங்களை இந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x